எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 29 June 2022

படித்ததில் பிடித்தவை (“ஆறுதல்” – செ.புனிதஜோதி கவிதை)

 



*ஆறுதல்*

 

சிரித்து

சிரித்து பேசிவிட்டு

செல்லும் கோமளாவின்

ஒவ்வொரு சிரிப்பு

முடிச்சில்...

 

அவளுக்குத் தெரியாமலே

அவிழ்ந்து விழுகிறது

ஏதோவொரு வலி…

ஏதோவொரு அவமானம்…

ஏதோவொரு இயலாமை…

ஏதோவொரு பொறாமை…

 

 

அத்தனையும்

நானும் சிரித்துக்கொண்டே

ஏதும் அறியாதவளைப்போல்

கேட்டுக்கொண்டேயிருந்தேன்…

 

இப்படியான

ஆறுதலைத் தவிர

வேறு என்ன

தந்திட முடியும்

அவளுக்கு..!

 

 

*செ.புனிதஜோதி*



No comments:

Post a Comment