எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 21 June 2022

படித்ததில் பிடித்தவை (“பார்வை தந்த பறவை” – மதார் கவிதை)

 


*பார்வை தந்த பறவை*

 

கண்ணை மூடிக்கொண்டே

இருந்த பொழுது

குருடனானேன்

 

எங்கும் ஒரே நிறம்

 

வானை பார்த்துக்கொண்டே

இருந்த பொழுது

குருடனானேன்

 

எங்கும் ஒரே நிறம்

 

போகிற போக்கில்

பார்வை தந்து போனது

ஒரு பறவை..!

 

 

*மதார்*

(கல்குதிரை இதழ்)



1 comment:

  1. ஒரு நல்ல கவிதையை,
    கவிதை அனுபவத்தை
    வாசிக்கும் போது
    குலைத்துக்கொள்ள முடியுமா?
    முடியும்.
    ஏனென்றால் நான் இதைச்
    செய்திருக்கிறேன், என்னுடைய
    இந்தச் செயலுக்கு மதாரின்
    கவிதைகளும் தப்பவில்லை.
    ஆனால் இந்தக் கவிதையை
    அப்படியே விட்டுவிடுகிறேன்,
    இது கவிதை, அவ்வளவுதான்.
    இந்தக் கவிதையில் ஒரு
    தூய்மையிருக்கிறது, நல்ல
    கவிதைக்கே உரிய தூய்மை.
    கடைசி மூன்று வரிகளை விட்டு
    மனம் நகர மறுக்கிறது,
    தோன்றியதை வரையறுத்துக்
    கூற முடியவில்லை, அது நல்ல
    கவிதையை வாசித்தவுடன் எழும்
    ஒரு உணர்வு என்று மட்டும்
    சொல்லமுடிகிறது. இது நல்ல
    கவிதை என்று வகைப்படுத்துவது
    ரசனை சார்ந்ததாக இருக்கலாம்,
    ஆனால் அதீதமான
    எண்ணங்களை இந்தக்
    கவிதையின் மேல் செலுத்தாமல்
    இரு என்று மனதில் ஏதோ ஒன்று
    சொல்கிறதே, அதையே
    உள்ளுணர்வு என்று
    இப்போதைக்கு
    நம்பிக்கொள்கிறேன்.

    *பாலாஜி ராஜூ*

    https://www.jeyamohan.in/166951/

    ReplyDelete