எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 19 June 2022

*ஆல்பம்*

 


திருமண வரவேற்பில் கலந்துக்கொள்ள

அவசர அவசரமாக

அலுவலகத்திலிருந்து கிளம்பியதும்...

 

மெட்ரோவிலும், பேருந்திலும் பயணித்து

மாநகரத்து விளிம்பிலிருக்கும்

மண்டபத்துக்கு சென்றதும்...

 

மணமக்கள் மேடையேறும் வரை

நீண்ட காத்திருந்தலும்...

 

நீளமான வரிசையில் முன்னேறி

மணமக்களை வாழ்த்தியதும்...

 

இரவு விருந்தில்

இடம் கிடைத்ததும்

அவசரமாக சாப்பிட்டதும்...

 

வாகன நெரிசலில் சிக்கி

நடு இரவில் வீடு திரும்பியதையும்...

 

தாமதமானதற்கு மனைவியை

சமாதானப்படுத்தியதும்...

 

நினைவில் வந்து செல்கின்றன...

 

நண்பர் மகளின்

திருமண வரவேற்பு ஆல்பத்தை

பார்க்கும் போது..!

 


*
கி.அற்புதராஜு*

11 comments:

  1. வெங்கட்ராமன், ஆம்பூர்19 June 2022 at 08:22

    👏👏😃😃💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. அம்மையப்பன்19 June 2022 at 08:23

    🤣

    ReplyDelete
  3. சிவய்யன்19 June 2022 at 08:25

    👌💐

    ReplyDelete
  4. ஸ்ரீராம்19 June 2022 at 08:30

    ஆஹா..!
    யதார்த்தமான
    அவஸ்தைகளின்
    வர்ணிப்பு.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. ஜெயகுமார். G19 June 2022 at 09:03

    👍👏🙏

    ReplyDelete
  6. நரசிம்மன் R.K19 June 2022 at 09:13

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கெங்கையா19 June 2022 at 15:15

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பிருந்தா19 June 2022 at 20:47

    பிறிதொருநாள்
    திருமண ஆல்பத்தை
    பார்க்கும்போது...
    அந்த வரவேற்ப்பில்
    கலந்துக்கொண்டப்போது
    நடந்த சம்பவங்களை
    அழகாகச்சொல்லியிருக்கிறார்
    கவிதாசிரியர்.
    அருமை.

    ReplyDelete
  9. இந்த அனுபவங்கள்
    எல்லோருக்குமே
    நிகழ்ந்திருக்கும்.
    Superb.

    ReplyDelete
  10. ஸ்ரீகாந்தன்20 June 2022 at 08:02

    👌👍

    ReplyDelete