எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 11 June 2022

படித்ததில் பிடித்தவை (“தாகம்” – தேவதேவன் கவிதை)

 


*தாகம்* 

 

தாகவெறியுடன்

எரிகிறது நெருப்பு.

அதற்குத் தேவை தண்ணீர்.

நாம் சொரிந்துகொண்டிருப்பதோ

வகை வகையான நெய்கள்..!

 

*தேவதேவன்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *தேவதேவன்* என்ற
    புனைப்பெயரால் அறியப்பட்ட
    பிச்சுமணி கைவல்யம் ஒரு
    நவீனத் தமிழ் கவிஞர் ஆவார்.
    பிச்சுமணி கைவல்யம் என்றப்
    பெயரில் கதைகளையும் எழுதி
    வருகின்றார்.
    இவர் எழுதிய "தேவதேவன்
    கவிதைகள்" எனும் நூல்
    தமிழ்நாடு அரசின் தமிழ்
    வளர்ச்சித் துறையின் 2005 ஆம்
    ஆண்டுக்கான சிறந்த நூல்களில்
    புதுக்கவிதை எனும்
    வகைப்பாட்டில் பரிசு
    பெற்றிருக்கிறது.

    கைவல்யம் விருதுநகர்
    மாவட்டத்தில் உள்ள
    இராஜாகோயில் என்ற ஊரில்
    மே 5, 1948 ஆம் ஆண்டு
    பிச்சுமணி தம்பதியினருக்குப்
    பிறந்தார்.
    ஈ. வெ. ராமசாமி இவருக்குக்
    கைவல்யம் என்றப் பெயரை
    இட்டார்.
    தந்தையுடன் 19 அகவையில்
    தூத்துக்குடிக்கு பிழைப்புத் தேடி
    வந்த கைவல்யம் இன்றளவும்
    அங்கேயே தங்கியிருக்கிறார்.
    பள்ளிப்படிப்பை முடித்தபின்
    கைவல்யம் ஒரு சிறு அச்சகம்
    ஒன்றை நடத்தி வந்தார்.
    பின்னர் ஆசிரியர் படிப்பு
    முடித்து தூத்துக்குடியிலேயே
    ஆசிரியரானார்.
    நகராட்சிப் பள்ளியில்
    இடைநிலை ஆசிரியராகப்
    பணியாற்றினார்.
    2002 ஆம் ஆண்டு ஆசிரியர்
    பணியிலிருந்து ஓய்வுப் பெற்றார்.
    இவரது மனைவி சாந்தி,
    மகள் அமர்த்தா பிரீதம்,
    மகன் அரவிந்தன்.

    இளம்வயதில் மரபுக்கவிதைகள்
    எழுதிவந்த கைவல்யம்
    தோரோ, எமர்சன் ஆகியோரின்
    படைப்புகளால் கவரப்பட்டு
    நவீனக் கவிதைகளைப் புனையத்
    தொடங்கினார்.
    குறுகிய காலம் கேரளத்தில்
    வாழ்ந்தபோது அங்கிருந்த
    இயற்கைக் காட்சிகளினால்
    ஆழ்மான மனநகர்வுக்கு உள்ளாகி
    நிறைய கவிதைகள் எழுதினார்.
    இக் காலகட்டத்தில் அவர்
    சுந்தர ராமசாமி தன் வீட்டு
    மாடியில் நடத்திவந்த காகங்கள்
    என்ற இலக்கிய உரையாடல்
    அமைப்பில் நெடுந்தொலைவுப்
    பயணம் செய்து வந்து கலந்துக்
    கொள்வதுண்டு.

    கைவல்யத்தின்
    முதல்கவிதைத் தொகுப்பு
    "குளித்துக் கரையேறாத
    கோபியர்கள்" 1982 ஆம் ஆண்டு
    வெளிவந்தது.
    இரண்டாவது தொகுப்பு
    "மின்னற்பொழுதே தூரம்"
    பிரமிள் முன்னுரையுடன்
    வெளிவந்து கவிதை
    வாசகர்களால் கவனிக்கப்பட்டது.
    தொடர்ந்து 'மாற்றப்படாத வீடு'
    பிரமிள் முன்னுரையுடன்
    வெளிவந்தது.
    பெரும்பாலான கவிதைகளை
    தன் நண்பர்களான
    முத்துப்பாண்டி, லெனா குமார்,
    காஞ்சனை சீனிவாசன்
    ஆகியோரின் உதவியுடன் அவரே
    வெளியிட்டு வந்தார்.
    பின்னர் அவரது கவிதைகளைத்
    தமிழினி பதிப்பகம் வெளியிட
    தொடங்கியது.
    2005 ஆம் ஆண்டு அவரது
    கவிதைகளுக்கான
    முழுத்தொகுப்பு "தேவதேவன்
    கவிதைகள்" என்ற பெயருடன்
    தமிழினி பதிப்பகத்தால்
    வெளியிடப்பட்டது.
    "தேவதேவன் கவிதைபற்றி"
    என்ற உரையாடல் நூலையும்
    "அலிபாபவும் மோர்ஜியானாவும்"
    என்ற நாடக நூலையும் எழுதி
    வெளியிட்டிருக்கிறார்.

    1970-80 களில் தூத்துக்குடியில்
    கலைப்படங்களுக்கான
    திரைப்படச் சங்கம் ஒன்றையும்
    நடத்திவந்தார்.

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்11 June 2022 at 08:33

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  3. சிவ. ஆதிகேசவலு11 June 2022 at 08:35

    🙏🙏🙏

    ReplyDelete
  4. செல்லதுரை11 June 2022 at 08:59

    👌👌

    ReplyDelete
  5. கெங்கையா11 June 2022 at 15:34

    கவிதை மிக அருமை.

    ReplyDelete