எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 28 June 2022

படித்ததில் பிடித்தவை (“இழுத்துச் செல்லாது” – கல்யாண்ஜி கவிதை)

 


*இழுத்துச் செல்லாது*

 

கோரைப் பல்லிலிருந்து

பீரிட்ட உறுமல்

கழுத்துப் பட்டியை மீறி

முன்சென்றது.

 

தொய்வற்ற சங்கிலியின்

விறைத்த கண்ணிகள்

வளர்ப்பு மனிதனின்

வியர்த்த உள்ளங்கையை

இழுத்தன.

 

நாய்கள் மேல் ஒரு அபிமானம்

எனக்கும் உண்டு.

 

ஆனாலும்

ஒன்றின் மீதான அபிமானம்

ஒருநாளும் என்னை

இழுத்துச் செல்லாது தெருவெங்கும்..!

 

*கல்யாண்ஜி*





3 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்28 June 2022 at 11:25

    மிக அருமை.

    பரிவுக்கும், பற்றுதலுக்கும்
    உரிய நுண்ணிய வேறுபாட்டை
    கவிஞர் அழகாக கோடிட்டு
    காட்டுகிறார்.

    ReplyDelete
  3. கெங்கையா28 June 2022 at 11:26

    கவிதை மிக அருமை.

    ReplyDelete