எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 12 August 2021

படித்ததில் பிடித்தவை (“பூ காணல்” – கல்யாண்ஜி கவிதை)

 


*பூ காணல்*

 

மரத்தில், கிளையில்,

மஞ்சரியில் பார்த்தாயிற்று.

கீழ்த் தூரில், மண்ணில்

கிடப்பதையும் ஆயிற்று.

வாய்க்க வேண்டும்

காம்பு கழன்ற பின்

தரை இறங்கு முன்

காற்றில் நழுவி வருமோர்

அந்தரப் பூ காணல்..!

 

*கல்யாண்ஜி*




7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. காற்றில் நழுவி, சுழன்றபடி
    கீழிறங்கும் பூவை நான்
    பார்த்திருக்கிறேன்.
    எனக்கு இக்கவிதை
    பிடித்த காரணம்
    எனக்கு இருக்கும் ஒரு,
    சற்றே கிறுக்குத்தனமான,
    விருப்பம்.
    பலவிதமான
    மரங்களிலிருந்து விழும்
    இலைகளை,
    அவை தரையை
    தொடும் முன்பே
    பிடித்து ஒரு ஆல்பம்
    தயாரிக்க வேண்டுமென்று!
    ஆல்பத்தின் பெயர் :
    “விழுந்து கொண்டே
    இருக்கும் இலைகள்”
    அல்லது
    “விழுந்து முடியாத இலைகள்”!

    (திரு.டி.கார்த்திகேயன்
    அவர்கள் எழுத்தாளர்
    ஜெயமோகன் அவர்களுக்கு
    எழுதிய கடிதத்திலிருந்து.)

    ReplyDelete
  3. ஸ்ரீராம்12 August 2021 at 08:40

    மிக அருமை.

    ReplyDelete
  4. சுப்புலெஷ்மி12 August 2021 at 08:42

    நன்று.

    ReplyDelete
  5. செல்லதுரை12 August 2021 at 12:19

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. கெங்கையா12 August 2021 at 12:20

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. உதிரும் காட்சிகளில்
    அல்லது அந்தரத்தில்
    நிகழும் காட்சிகளில்
    பொதிந்திருக்கும் அழகையும்
    புதிர்த்தன்மையையும்
    மீண்டும் மீண்டும் பல
    இடங்களில் கண்டடைந்தபடி
    விரிகின்றன கல்யாண்ஜியின்
    கவிதைகள்.

    #எழுத்தாளர் பாவண்ணன்#

    ReplyDelete