எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 11 August 2021

படித்ததில் பிடித்தவை (“நிழல்” – கலாப்ரியா கவிதை)

 


*நிழல்* 

 

உச்சி வெயிலில்

இரண்டு

வண்ணத்துப் பூச்சிகள்

கீழ் மேலாய்

மேல் கீழாய்

பறந்து

ஒன்றுகொன்று

நிழல் தந்து கொண்டு..!

 

*கலாப்ரியா*




7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கலாப்ரியா*

    (பிறப்பு: சூலை 30, 1950)
    தமிழின் நவீன கவிஞர்களில்
    குறிப்பிடத்தக்கவர்.
    எழுபதுகளில் எழுதத்
    தொடங்கியவர்.

    கலாப்ரியாவின் இயற்பெயர்
    சோமசுந்தரம்.
    சிறு வயதில் எம்.ஜி.ஆர்
    ரசிகனாய் தி. மு. க
    தொண்டனாக தீவிரமாக
    இயங்கினார்.

    அறிஞர் அண்ணாவின்
    இரங்கல் கூட்டத்திற்காக
    முதன்முதலில் கவிதை
    (இரங்கற்பா) எழுதிய
    சோமசுந்தரம்,
    வண்ணநிலவனின்
    கையெழுத்து இதழான
    பொருநையில் கவிதை
    எழுதும் போது தனக்குத்
    தானே 'கலாப்ரியா' என்று
    பெயர் சூட்டிக்கொண்டார்.
    பின்னர் கசடதபறவில்
    கவிதைகள் வெளிவரும்போது
    கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
    கசடதபறவிற்கு பின்
    வானம்பாடி, கணையாழி, தீபம்
    ஆகிய இதழ்களில் எழுதினார்.
    கலாப்ரியாவின் கவிதைகளில்
    பாலுணர்வு வெளிப்பாடுகளும்
    சில வேளைகளில் வன்முறையும்
    கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது
    என்று சிலரும், இது அவரது
    கவிதை மாந்தர்கள் வாழ்வை
    ஒட்டியது என்று சிலரும்
    கருதுவதுண்டு {பேராசிரியர்
    தமிழவன் படிகள் இதழில்
    எழுதிய கட்டுரை,
    ஜெயமோகன், கலாப்ரியா
    கவிதைகள் தொகுப்புக்கு
    எழுதியுள்ள முன்னுரைகள்}.

    நெல்லை மாவட்டம்
    கடையநல்லூரில் வங்கிப்
    பணி நிறைவு பெற்றவர்.
    தன்னை சுற்றி நிகழும்
    விஷயங்களை கவிதைகளில்
    பதிவு செய்து வருகிறார்
    'கலாப்ரியா'.

    ReplyDelete
  2. சத்தியன்11 August 2021 at 05:59

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. செல்லதுரை11 August 2021 at 09:53

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்11 August 2021 at 12:53

    மிக அருமை.

    ReplyDelete
  5. வண்ணத்துப் பூச்சிகள்
    ஒன்றையொன்று
    சுற்றி சுற்றி பறப்பதை
    பல முறை பார்த்திருக்கிறேன்.
    ஆனால் இவ்விரண்டும்
    ஒன்றுக்கொன்று நிழல்
    தருகின்றன என்பது என்னை
    புன்னகைக்க வைத்தது.
    படித்த பல மாதங்களுக்குப்
    பிறகு என் அலுவலகத்தின்
    நாலாம் தளத்தின் கண்ணாடிக்கு
    வெளியே இரு மஞ்சள் நிற
    வண்ணத்துப் பூச்சிகள்
    ஒன்றையொன்று சுற்றி
    வந்தபோது இக்கவிதை
    நினைவுக்கு வந்தது.

    (திரு.டி.கார்த்திகேயன்
    அவர்கள் எழுத்தாளர்
    ஜெயமோகன் அவர்களுக்கு
    எழுதிய கடிதத்திலிருந்து.)

    ReplyDelete
  6. கமலநாதன்11 August 2021 at 16:37

    இரு வண்ணத்துப்
    பூச்சிகள்
    மேலும் கீழுமாகப்
    பறப்பதை
    கலாப்பிரியா
    எப்படிப் பார்க்கிறார்
    பாருங்களேன்.

    நேர்மறைச் சிந்தனைகளை
    வெளிப்படுத்தும் போது
    கவிதைகள்
    அழகு பெறுகின்றன.

    ReplyDelete
  7. சுப்புலெஷ்மி11 August 2021 at 20:32

    Nice.

    ReplyDelete