எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 30 August 2021

படித்ததில் பிடித்தவை (“வரம் வாங்கிய சொற்கள்” – மணி அமரன் கவிதை)

 


*வரம் வாங்கிய சொற்கள்*

 

இதழ் பூட்டிய மௌன சிறைகளில்

சிறைபட்டுக் கிடக்கிறது

ஊடல் கொண்ட இதயத்தின் சொற்கள்.

 

இறுகிக் கிடக்கும் மௌனத்தையும்

உடைக்கும் உளியாகிறது

கண்ணீர் கண்டு கசியும் சொற்கள்.

 

புரட்டி படிக்க விழிகளின்றி

புத்தக பக்கங்களில் போர்த்தி துயில்கிறது

புத்தன் உதிர்த்த போதனை சொற்கள்.

 

ஆலகால விஷம் தடவி ஆயுளுக்கும் கொல்கிறது

என்னை மறந்து விடுங்கள் என்று

என்னவளின் இதழ் உதிர்த்த

அன்பை மறந்த சொற்கள்.

 

காலம் காலமாக ஓதப் பட்டும்

கண் விழிக்கச் செய்ய வில்லை

கடவுளின் காதுகளில் விழும்

புரோகிதர்களின் மந்திரச் சொற்கள்.

 

தப்பு தப்பாய் பேசினாலும்

தன்னை மறக்க செய்கிறது

அதோ...

தவழும் குழந்தையின் இதழ்களில் வழியும்

தவம் கிடந்து..!

 

*மணி அமரன்*

No comments:

Post a Comment