எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 10 August 2021

படித்ததில் பிடித்தவை (“மழை” – காசி ஆனந்தன் கவிதை)

 


*மழை*

 

நீர்

கொடுப்பதோ

பூமி..!

 

பேர்

எடுப்பதோ

வானம்..!

 

*காசி ஆனந்தன்*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *காசி ஆனந்தன்*

    உணர்ச்சிக் கவிஞர்
    காசி ஆனந்தன் (பிறப்பு: 1938,
    மட்டக்களப்பு, இயற்பெயர்:
    காத்தமுத்து சிவானந்தன்)
    ஈழத்து எழுச்சிக் கவிஞர்.
    இளைஞனாக இருந்த
    காலத்திலேயே சிங்கள
    ஆதிக்க வெறியர்களினதும்
    அரசினதும் அடக்குமுறைகள்
    மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு
    எதிராக போராட்டம் செய்தவர்.

    மட்டக்களப்பு மத்திய கல்லூரியில்
    படித்துக் கொண்டிருக்கும் போதே
    தனிச்சிங்களச் சட்டத்துக்கு
    எதிராக போராட்டம் செய்து சிறை
    சென்றவர்.
    வாகன இலக்கத்தகடுகளிலேயே
    சிங்கள எழுத்துக்கள்
    இருக்கக்கூடாது என்று அவற்றை
    அகற்றும் போராட்டத்திலும்
    பாடசாலை பெயர்ப்பலகைகளில்
    சிங்கள மொழி இருக்கக்கூடாது
    என்றும் போராட்டம் செய்து
    காவலர்களால் கைதாகி
    சிறையில் சித்திரவதை
    அனுபவித்தவர்.

    பின்னர் தமிழ் நாடு சென்று
    சென்னை பச்சையப்பா
    கல்லூரியில் தமிழிலும்
    தமிழிலக்கியத்திலும் உயர்
    கல்வி கற்கும் வேளையில்
    அங்கு பெரியார் ஈ. வே.
    ராமசாமியுடன் இணைந்து
    செயற்பட்டார்.
    பின்னர் 1963இல் இலங்கை
    திரும்பி இலங்கை அரச
    மொழித்திணைக்களத்தில்
    மொழிபெயர்ப்பாளராக
    சேர்ந்தார்.
    1972 இல் இலங்கை குடியரசாக
    மாறியபோது அதன் தமிழ்
    எதிர்ப்புக் கொள்கையோடு
    ஒத்து வராததால் அரசுப்
    பணியிலிருந்து விலகி
    ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு
    துணை நின்றார்.
    இவர் இலங்கையில் ஐந்து
    சிறைகளில் சுமார் ஐந்து
    வருடங்கள் சிறைவாசம்
    அனுபவித்தவர்.

    இந்திய இலங்கை ஒப்பந்தம்
    கைச்சாத்தான காலப்பகுதியில்
    பேச்சுக்களுக்காக
    விடுதலைப்புலிகள் இந்தியா
    சென்றபோது காசியும் இந்தியா
    சென்றார்.
    விடுதலைப்புலிகளின் அரசியல்
    விவகாரக்குழுவின் மத்திய குழு
    உறுப்பினராக
    தேர்ந்தெடுக்கப்பட்டு
    அக்காலப்பகுதியில் இந்தியாவில்
    ராஜீவ் அரசுடனான
    பேச்சுக்குழுவில்
    விடுதலைப்புலிகள் தரப்பு
    சார்பாளர்களில் ஒருவராக காசி
    சென்றார்.

    பின்னர் தமிழகத்திலேயே
    தங்கிவிட்ட காசி ஆனந்தன்
    இன்றும் ஈழத்தமிழருக்கு
    ஆதரவாக அங்கு குரல்
    கொடுத்தவண்ணமுள்ளார்.
    ஈழப்போராட்ட காலத்தின்
    இக்கட்டான காலப்பகுதிகளில்
    தோளோடு தோள் நின்ற
    இவருக்கு தமிழீழத்தின்
    அதிஉயர் விருதான மாமனிதர்
    விருது வழங்கிச்
    சிறப்பிக்கப்பட்டார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. தெருப்புலவர்
    2. உயிர் தமிழுக்கு – 1961
    3. தமிழன் கனவு – 1970
    4. காசி ஆனந்தன் கவிதைகள் -
    1981 (பாகம் 1, 2)
    5. சுவர்க்கவிகள்
    6. பிரபாகரன் நெருப்பின் பிறப்பு
    பெண்பா
    7. நறுக்குகள் பாகம்-2


    சிறுகதைகள் தொகுப்பு:

    1. காசி ஆனந்தன் கதைகள்
    2. நறுக்குகள்

    ReplyDelete
  2. செல்லதுரை10 August 2021 at 07:36

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்10 August 2021 at 08:37

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்10 August 2021 at 08:38

    வானம், பூமியின்
    கூட்டு முயற்சியில்
    விளைவது நீர்
    என்ற அமிர்தம்.

    ReplyDelete