எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 5 August 2021

படித்ததில் பிடித்தவை (“விடை” – தமிழன்பன் கவிதை)

 


*விடை*

 

ஒரு வலுவான

உலுக்கலுக்கு

உள்ளத்தை

உட்படுத்தியபோது

வினா, துணை வினாக்கள்

உள் வினாக்கள்

சடசடவென உதிர்ந்துவிட

நின்றேன்

பளிச்சென்று

ஒரு விடையாக

 

ஆயினும்

எந்த வினாவின் விடையாக நான்..?

 

*தமிழன்பன்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *ஈரோடு தமிழன்பன்*

    இவரது இயற்பெயர்
    ந.செகதீசன்.
    இவர் தமிழகக் கவிஞர் ஆவார்.
    ஆசிரியர், மரபுக் கவிஞர்,
    கவியரங்கக் கவிஞர்,
    புதுக்கவிதைக் கவிஞர்,
    சிறுகதை ஆசிரியர், புதின
    ஆசிரியர், நாடக ஆசிரியர்,
    சிறார் இலக்கியப் படைப்பாளி,
    வாழ்க்கை வரலாற்றாசிரியர்,
    திறனாய்வாளர், கட்டுரையாளர்,
    ஓவியர், சொற்பொழிவாளர்,
    திரைப்பட இயக்குநர், திரைப்பட
    பாடலாசிரியர், என பன்முகப்பட்ட
    ஆளுமைகளைக்
    கொண்டிருப்பவர்.

    பிறப்பு:

    செப்டம்பர் 28, 1933
    சென்னிமலை, ஈரோடு,
    தமிழ்நாடு இந்தியா.

    பெற்றோர்:

    செ.இரா.நடராசன்,
    வள்ளியம்மாள்.

    விருதுகள்:

    *வணக்கம் வள்ளுவ* என்னும்
    கவிதைத் தொகுப்பிற்காக
    *சாகித்திய அகாதமி* விருதை
    2004 ஆம் ஆண்டில் பெற்றார்.

    தமிழக அரசின் *கலைமாமணி*
    விருது.


    சென்னை தொலைக்காட்சி
    நிலையத்தில் செய்தி
    வாசிப்பாளாராக பணியாற்றியவர்.
    தமிழ்நாடு அரசின் இயல்
    இசை நாடக மன்றத்தின்
    நிர்வாகக் குழு உறுப்பினராகவும்,
    தமிழ்நாடு அரசின் அறிவியல்
    தமிழ் மன்றத்தின்
    உறுப்பினராகவும் பணியாற்றி
    உள்ளார்.

    ReplyDelete
  2. செல்லதுரை5 August 2021 at 09:11

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்5 August 2021 at 10:27

    வாழ்நாள் முழுவதும்
    இது எல்லா மனிதர்களுக்கும்
    ஏற்படும் குழப்பம்.

    ReplyDelete
  4. சீனிவாசன்5 August 2021 at 18:03

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. கெங்கையா5 August 2021 at 18:05

    கவிதை மிக அருமை.

    ReplyDelete