எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 8 August 2021

படித்ததில் பிடித்தவை (“பார்க்கும் பொம்மை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பார்க்கும் பொம்மை*

 

தன் குழந்தைக்கு

பொம்மை

வாங்க முடியாது

எனத் தெரிந்து

பேரம் பேசி

வெளியேறப் பார்க்கிறார்

அப்பா.

 

பாசம் உணர்ந்து

கட்டுபடியாகும் பேரத்துக்கு

படிய வைத்து

விற்கப் பார்க்கிறார்

கடைக்காரர்.

 

பொம்மைப் பார்க்க

போராடுகின்றனர்

இருவரும்..!

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்8 August 2021 at 07:47

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்8 August 2021 at 10:40

    பாசம் வென்றதா?

    ReplyDelete
  4. செல்லதுரை8 August 2021 at 10:41

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. செந்தில்குமார். J8 August 2021 at 10:42

    கவிதை அருமை.

    ReplyDelete