எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 6 August 2021

படித்ததில் பிடித்தவை (“அலைவரிசை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*அலைவரிசை*

 

வேகமாய் வந்தும்

விட்டு விட்டோம்.

 

ரயில் போயிடுச்சி

நான் கோபப்பட்டேன்.

 

ரயில் போயிடுச்சே

மனைவி வருத்தப்பட்டாள்.

 

ரயில் போயிடுச்சா

குழந்தை சிரித்தாள்..!

 

*ராஜா சந்திரசேகர்*

{ஆனந்த விகடன் 02.12.2009 இதழில்

வெளியானக் கவிதை}




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஹரிகுமார்6 August 2021 at 08:42

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்6 August 2021 at 08:43

    ஒரு நிகழ்வை
    பலரது கோணங்களில்
    அழகாய் கவிதையில்
    சொல்லியிருக்கும்
    பாங்கு அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை6 August 2021 at 11:35

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்6 August 2021 at 11:36

    மகிழ்ச்சி.

    ReplyDelete