எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 26 August 2021

படித்ததில் பிடித்தவை (“வார்த்தைகளுக்கு வசப்படாதவை” – அமீர் அப்பாஸ் கவிதை)

 


*வார்த்தைகளுக்கு வசப்படாதவை*

 

குழந்தைகளின் அழுகை

அழுகை சார்ந்ததது அல்ல..!

விருப்பமின்மையின் எதிரொலி..!

 

குழந்தைகளின் புன்னகை

மகிழ்ச்சி சார்ந்ததது அல்ல..!

மொழியின் தேவைகளற்றும்

புரிதல் நிகழ்ததன்

நன்றி தெரிவித்தல்..!

 

சொற்களை விடவும்

ஓசைகளும் சைகைகளும்

உயர்ந்த அர்த்தம் மிக்கவை.

என குழந்தைகள் நமக்கு

உணர்த்தி விடுகின்றன..!

 

குழந்தைகள் பிழைப்பட

பேசும் போதெல்லாம்

இலக்கணம் தவறி

இலக்கியமாகின்றன..!

 

குழந்தைகள்

படைப்பின் ரகசியங்களை

வியந்து இரசிக்கின்றன..!

 

தானே ஒரு வியக்கத்தக்க

படைப்பின் அதிசயம்

என்பதையும்

மறந்து இரசிக்கின்றன..!

 

*அமீர் அப்பாஸ்*


4 comments:

  1. கலக்கல் கந்தசாமி26 August 2021 at 14:41

    அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்26 August 2021 at 16:41

    மிக அருமையான
    உளவியல் உண்மை.
    உணர்வுகள் புரிந்து விட்டால்
    மனிதர்க்கு மொழியே
    தேவையில்லை என்ற
    கவிதை வரிகள்
    ஞாபகத்தில் வருகிறது.

    ReplyDelete
  3. சத்தியன்26 August 2021 at 16:41

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. கெங்கையா26 August 2021 at 16:43

    அருமையான கவிதை.

    ReplyDelete