எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 22 August 2021

*பாயசம்*


பண்டிகை நாளில்

பக்கத்து வீட்டிலிருந்து

பாயசம் வந்தது.

பையின் உள்ளே

பாத்திரம் கவிழ்ந்து

வாசலிருந்து

முதல் மாடி வீடு வரை

படியெங்கும்

சொட்டிக் கொண்டே

கொண்டு வந்திருந்தாள்

சிறுமி அத்விகா.

 

ஈரத் துணி கொண்டு

படிகளை துடைக்க

வந்த போதுதான்

தெரிந்தது...

 

ஒவ்வொரு சொட்டு

பாயசத்தை சுற்றிலும்

கூட்டமாக சிற்றெறும்புகள்.

துடைக்காமல் திரும்பினேன்.

 

ஆயிரம் உயிர்களுக்கு

அன்னமிட்டிருந்தாள்

அத்விகா குட்டி..!

 

*கி.அற்புதராஜு*


16 comments:

  1. ஜெயராமன்22 August 2021 at 06:19

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்22 August 2021 at 06:56

    மிக அருமை.

    ReplyDelete
  3. பரந்தாமன் (அக்னி)22 August 2021 at 08:22

    So lovely.

    ReplyDelete
  4. செல்லதுரை22 August 2021 at 08:22

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. சுப்புலெஷ்மி22 August 2021 at 08:26

    நன்று.

    ReplyDelete
  6. ஹரிகுமார்22 August 2021 at 08:51

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. தெய்வசிகாமணி22 August 2021 at 10:50

    அருமை சார்.

    ReplyDelete
  8. மோகன்தாஸ். S22 August 2021 at 11:01

    கவிதைக்கு பாராட்டுகள்.
    அருமை.

    ReplyDelete
  9. சீனிவாசன்22 August 2021 at 12:54

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  10. ஸ்ரீகாந்தன்22 August 2021 at 13:59

    கவிதை அருமை.

    ReplyDelete
  11. கெங்கையா22 August 2021 at 16:22

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. கலாவதி22 August 2021 at 17:49

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. சிறப்பு.

    ReplyDelete
  14. நரசிம்மன் R.K23 August 2021 at 06:53

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வெங்கடபதி15 October 2021 at 07:16

    அருமை.

    ReplyDelete