எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 20 August 2021

படித்ததில் பிடித்தவை (“குளவி இல்லம்” – காசாவயல் கண்ணன் கவிதை)

 


*குளவி இல்லம்*

 

சமையலறை

ஜன்னல் வழியே நுழைந்து

வீட்டுக்குள் வட்டமடித்த

குளவியொன்று

கதவுக்குப் பின்னே மறைந்து

ஓரே மூச்சில் கூடுகட்டி

குடியேறியும் விட்டது.

அகற்றும் அவசரத்தில்

அப்பாவும், பிள்ளைகளும்.

 

ஏக்கப்பெருமூச்சோடு

அவள் சொன்னாள்,

அதுவாச்சும்

சொந்தமாய் கட்டிய வீட்டில்

இருந்துவிட்டு போகட்டுமென..!

 

*காசாவயல் கண்ணன்*


4 comments:

  1. செல்லதுரை20 August 2021 at 17:11

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்20 August 2021 at 17:13

    ஏழை அன்னையின்
    ஏக்கத்தின் வெளிப்பாட்டை
    தெளிவாக கூறியுள்ளார்
    கவிஞர் அண்ணா.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  3. சுப்புலெஷ்மி20 August 2021 at 17:14

    Nice.

    ReplyDelete
  4. பிரபாகரன். R20 August 2021 at 19:41

    Very Superb Sir.

    ReplyDelete