எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 9 August 2021

படித்ததில் பிடித்தவை (“தேடி நடப்பவன்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*தேடி நடப்பவன்*

 

கையில் கோடரியுடன்

தொண்டை வறள

தேடி நடப்பவன்

கனத்த மனத்துடன்

சொல்கிறான்

அய்யோ

எல்லா நிழலையும்

வெட்டிட்டனே…’

பாம்பாய் நீளும்

அவன் நிழலை

கொத்தி தின்கிறது

வெயில்..!

 

*ராஜா சந்திரசேகர்*




1 comment:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete