எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 3 April 2022

*மலர்ந்தேன்... வாடினேன்...*

 


அலுவலகம் செல்கையில்

மாற்றுத்திறனாளி ஒருவர்

ரயில் தண்டவாளத்தைக்கடக்க

உதவினேன்.

 

அன்று முழுவதும்

அலுவலகத்தில் மிகவும்

உற்சாகமானேன்.

 

மாலை வீடு திரும்புகையில்

அதே மாற்றுத்திறனாளி

டாஸ்மாக் கடைக்குள்

நுழைவதைப் பார்த்தேன்.

 

ஏனோ...

இரவு நெடுநேரம்

தூக்கம் வராமல்

சங்கடத்துக்குள்ளானது மனது..!

 

*கி.அற்புதராஜு*

9 comments:

  1. செல்லதுரை3 April 2022 at 10:26

    கவிதை நன்று.

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்3 April 2022 at 10:38

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    வாழ்த்துகளும், நன்றியும்.

    ReplyDelete
  3. ஜெயராமன்3 April 2022 at 10:59

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. சிவபிரகாஷ்3 April 2022 at 12:17

    உறுத்தல்.

    ReplyDelete
  5. லதா இளங்கோ3 April 2022 at 16:57

    ஒருவரின் சொந்த
    உணர்ச்சி நிலையை
    வெளிப்படுத்துவது
    மட்டுமல்லாமல்,
    அனுதாபப்படவும்
    வைக்கும் கவிதை.

    ReplyDelete
  6. பிருந்தா3 April 2022 at 18:18

    எனக்கும்
    இது போன்ற
    அனுபவம் உண்டு.
    நான் உதவிய
    பிச்சைக்காரன்
    டாஸ்மாக் கடையிலிருந்து
    வருவதை பார்த்த பின்
    இப்போது நான்
    யாருக்கும் உதவுவதேயில்லை.

    அருமை.

    ReplyDelete
  7. சீனிவாசன்3 April 2022 at 21:43

    கவிதை மிகவும் அருமை.
    நம்முடைய மனநிலை
    புற சூழ்நிலைகளில் கிடையாது.
    அதை நாம் எப்படி
    எடுத்துக் கொள்கிறோம்
    என்பதில் உள்ளது.
    அதுவே நம்முடைய சுபாவம்.

    ReplyDelete
  8. ஸ்ரீராம்4 April 2022 at 23:37

    மிக அருமை.

    ReplyDelete
  9. கலைச்செல்வி9 April 2022 at 08:42

    கவிதை அருமை.

    ReplyDelete