எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 5 April 2022

படித்ததில் பிடித்தவை (“அப்பா யார் வீட்டில் இருப்பார்..?” – கமலநாதன் கவிதை)

 


*அப்பா யார் வீட்டில் இருப்பார்..?*

 

வாரிசுகள்

அனைவரும்

ஒன்றாக இருந்தனர்.

 

இனி அப்பா யார்

வீட்டில் இருப்பதென்ற

விவாதம் அங்கில்லை.

 

தந்தை மரணித்திருந்தார்..!

 

*கமலநாதன்*



1 comment:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கமலநாதன்*
    அவர்கள் தமிழ்நாடு
    மின்சார வாரியத்தில் 1980ல்
    உதவிப் பொறியாளராக
    சேர்ந்து, 2015ல்
    மேற்பார்வைப் பொறியாளராக
    பணி ஓய்வு பெற்றவர்.

    தற்போது இருப்பது
    அவரது சொந்த ஊரான
    சேலத்தில்.

    தமிழார்வம் அவரது
    கல்லூரி காலத்தில்
    தொடங்கி இன்று வரை
    தொடர்கிறது.

    அவரது கவிதைகள்
    அனைத்தும்
    அவரது உணர்வின்
    வெளிப்பாடு.

    அவ்வப்போது எழுதும்
    அவரது கவிதைகள்
    எதையும் அவர் இதுவரை
    தொகுத்து வைக்கவில்லை.

    அவரது கவிதையில்
    அவருக்குப் பிடித்த வரிகள்:

    "சுமப்பதின் வலி
    அறிவேன்.
    அதனால்
    என் நினைவுகளும்
    கூட
    எவர் மனதிலும்
    சுமையாயிருக்க
    நான்
    விரும்புவதில்லை."

    ReplyDelete