எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 25 April 2022

படித்ததில் பிடித்தவை (“யாருக்கு பெரிய மனசு?” – செ.புனிதஜோதி கவிதை)



*யாருக்கு பெரிய மனசு?*

 

“விதவிதமா

சாமிக்கு பூக்கட்டி விக்கும் பூமாரிக்கு

ஒருமுழம் பூ

தலையில் ஏறாம

பார்த்துக்கிட்ட..

கடவுளுக்கு தான்

எம்புட்டு பெரிய மனசு..

 

 

ஆனாலும்

விடாம... பூமாரி

ஒருமுழம் பூவ

சாமி படத்தில வைச்சுட்டுத்தான்

வியாபாரத்தையே தொடங்குறா..!

 

*செ.புனிதஜோதி*


 

1 comment:

  1. ஸ்ரீராம்25 April 2022 at 16:17

    எதிர்பார்த்தல் இல்லா
    இறைநம்பிக்கை.

    ReplyDelete