எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 24 April 2022

படித்ததில் பிடித்தவை (“மூதாட்டி” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மூதாட்டி*

 

ஆளரவமற்ற இடத்தில்

ஆலயத்தின் மூலையில்

இமைமூடி

தவம்போல் அமர்ந்திருக்கும்

மூதாட்டியின் கண்களிலிருந்து

வழிகிறது நீர்.

அவள் மேல்

அசைகிறது ஒளிக்கீற்று.

பெருவயதுக்காரி

கண் திறக்கும்போது

பிரபஞ்சம்  சிறிதேனும்

பேரன்பைத் தரக்கூடும்..!

 

*ராஜா சந்திரசேகர்*



No comments:

Post a Comment