எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 31 March 2022

படித்ததில் பிடித்தவை (“தவம்” – செ.புனிதஜோதி கவிதை)

 


*தவம்*

 

அனலைத்தாங்கி கொண்டு

தீச்சட்டி எடுக்கும்

மல்லிகாவின் மகளுக்கு

வரன்

பார்க்கும் படலம்

இந்த வருடத்திலாவது

தீரவே்ண்டும்.

 

மாவிளக்கு எடுக்கும்

அன்னத்தின் கணவனுக்கு

உடல்நிலையில் முன்னேற்றம்

ஏற்படவேண்டும்.

 

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே

பொங்கல் வைக்கும்

ரத்தினா மகனுக்கு

இந்த  வருடத்திலாவது

வேலைக்கு மனுபோடும்

வேலை ஓயவேண்டும்.

 

இப்படி ஒவ்வொருவருக்காய்

வேண்டிக்கொள்ளும்

அம்மாவின் உலகம்

நம்மையே சுற்றி வரும்

நிலவின் சாயலானது..!

 

*செ.புனிதஜோதி*


8 comments:

  1. அம்மா கண் முன்னே தெரியும் கடவுள்

    ReplyDelete
  2. சீனிவாசன்31 March 2022 at 10:02

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்31 March 2022 at 10:03

    மிக உண்மை.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை31 March 2022 at 10:04

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. சத்தியன்31 March 2022 at 10:06

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  6. வெங்கட்ராமன், ஆம்பூர்31 March 2022 at 10:08

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    வாழ்த்துகளும், நன்றியும்.

    ReplyDelete
  7. Amma...
    she is unparalleled.

    ReplyDelete
  8. லதா இளங்கோ3 April 2022 at 16:58

    தாயை வணங்குகிறேன்.

    ReplyDelete