எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 28 March 2022

படித்ததில் பிடித்தவை (“இப்போது நான்” – வண்ணதாசன் கவிதை)

 


*இப்போது நான்*

 

ஆணா பெண்ணா என்ற

அடையாளமற்ற மரப்பாச்சி.

 

சின்ன வயதில்

அக்கா விளையாடுகையில்

தென்னங்கீற்றில்

தலைப்பாகை கட்டிய

ஒரு ஆணாக இருந்தது.

 

தம்பி விளையாடும் போது

மஞ்சள் ரிப்பனைப்

புடைவையாகச் சுற்றிய

ஒரு பெண்ணாக இருந்தது.

 

இப்போது நான்

எடுத்துப் பார்க்கையில்

அம்மையப்பனாய்

ஆதிமூலமாய்..!

 

*வண்ணதாசன்*



4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்28 March 2022 at 11:52

    சாமன்யனின்
    உண்மையான ஏக்கத்தை
    அழகாக பிரதிபலிக்கும் கவிதை;
    மிக அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்28 March 2022 at 11:52

    அற்புதம்.

    ReplyDelete
  4. வெங்கட்ராமன், ஆம்பூர்28 March 2022 at 11:54

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துகளும்,
    நன்றியும்.

    ReplyDelete