எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 13 March 2022

*தூக்கம்*


 நான் அலுவலகம் செல்ல

மாநகரம் நோக்கிய

அரை மணி நேர ரயில் பயணம்.

 

வழக்கத்துக்கு மாறாக

இருக்கை கிடைத்தது.

 

ஏதிரே இருவர்.

ஒருவர் அழகான உடையில்.

மற்றொருவர் அழுக்கான லுங்கியில்.

சற்றே இடைவெளி விட்டு நகர்ந்தார்

சன்னல் ஒரமாக அழகானவர்.

 

நான் புத்தகத்தில் மூழ்கினேன்.

 

அடுத்த நிறுத்தத்தில்

புத்தகத்திலிருந்து வெளியேறிய நான்

எதிர் இருக்கையில்

அந்த அதிசயக் காட்சியை

பார்க்க நேர்ந்தது...

 

அழகானவர்

சன்னலில் சாய்ந்தபடி

உறக்கத்திலிருந்தார்.

அவர் தோளில்

சரியாக முகம் சாய்த்து

அழுக்கானவரும்

உறக்கத்திலிருந்தார்.

 

மனம் புத்தகத்தை மறந்தது.

 

முதலில் அழகானவர்

விழித்தால் என்ன நடக்கும்

எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்.

 

எனது நிறுத்தம் வரும்வரை

இருவரும் விழிக்கவேயில்லை..!

 

 *கி.அற்புதராஜு*

13 comments:

  1. மோகன்தாஸ். S13 March 2022 at 09:05

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஜெயராமன்13 March 2022 at 09:06

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்13 March 2022 at 09:15

    "சமரசம் ஆகும் இடமே;
    வாழ்வில் காணா
    சமரசம் ஆகும் இடமே"
    என்ற கவிஞர்.மருதகாசியின்
    பாடல் வரிகள் நினைவிற்கு
    வந்தன.

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. அம்மையப்பன்13 March 2022 at 09:33

    வாழ்த்து புன்னகை.

    ReplyDelete
  5. கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. ஹரிகுமார்13 March 2022 at 10:23

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. சிவபிரகாஷ்13 March 2022 at 10:55

    முடிவு நன்றாக உள்ளது.
    அருமை.

    ReplyDelete
  8. மிகவும் அருமையான கவிதை,💐💐💐💐

    ReplyDelete
  9. வெங்கட்ராமன், ஆம்பூர்13 March 2022 at 18:09

    பாராட்டுகள்.
    வாழ்த்துகளும்,
    நன்றியும்.

    ReplyDelete
  10. ஸ்ரீகாந்தன்13 March 2022 at 20:22

    கவிதை அருமை.

    ReplyDelete
  11. கலைசெல்வி14 March 2022 at 10:09

    Superb sir.

    ReplyDelete