எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 3 March 2022

படித்ததில் பிடித்தவை (“அன்னையர்” – இசை கவிதை)

 


*அன்னையர்*

 

அப்பர் பெர்த்திலிருந்து

உருண்டு விழப்பார்க்கிறது குழந்தை.

 

ஜன்னல் வழியே

உலகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த

அவள் அன்னை

அதை உதறியெறிந்துவிட்டு

பதறியெழுந்து

கைவிரித்து நிற்கிறாள்.

 

அதே கணத்தில் அனிச்சையாய்

ஆங்காங்கே எழுந்து

கைவிரித்து நின்றனர் சில அன்னையர்.

 

நானும் ஒரு கணம்

அன்னையாகிவிட்டு

எனக்குத் திரும்பினேன்..!

 

*இசை () ஆ.சத்தியமூர்த்தி*

{‘உடைந்து எழும் நறுமணம்கவிதை நூலிலிருந்து.}



7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *இசை*
    இயற்பெயர் சத்தியமூர்த்தி.
    பிறப்பு : 1977.
    பொது சுகாதாரத் துறையில்
    பணி.
    வசிப்பது கோவை மாவட்டம்
    இருகூர்.

    வெளிவந்திருக்கும் நூல்கள் :

    1. காற்று கோதும்
    வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
    2. உறுமீன்களற்ற நதி
    (கவிதைகள்)
    3. சிவாஜிகணேசனின்
    முத்தங்கள் (கவிதைகள்)
    4. அதனினும் இனிது அறிவனர்
    சேர்தல் (கட்டுரைகள்)
    5. அந்தக் காலம் மலையேறிப்
    போனது (கவிதைகள்)
    6. லைட்டா பொறாமைப்படும்
    கலைஞன் (கட்டுரைகள்)
    7. ஆட்டுதி அமுதே (கவிதைகள்)
    8. உய்யடா உய்யடா உய்
    (கட்டுரைகள்)
    9. பழைய யானைக் கடை
    (கட்டுரைகள்)
    10. வாழ்க்கைக்கு வெளியே
    பேசுதல் (கவிதைகள்)
    11. நாயகன் வில்லன் மற்றும்
    குணச்சித்திரன் (கவிதைகள்)
    12. தேனோடு மீன் (கட்டுரைகள்)
    13. மாலை மலரும் நோய்
    (கட்டுரைகள்)
    14. உடைந்து எழும் நறுமணம்
    (கவிதைகள்)

    ReplyDelete
  2. சீனிவாசன்3 March 2022 at 07:15

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. ராஜேஷ் கண்ணா3 March 2022 at 07:15

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்3 March 2022 at 10:08

    தாய்மையின்
    பெருமை அது!

    ReplyDelete
  5. சத்தியன்3 March 2022 at 12:38

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  6. மிதிலா3 March 2022 at 12:40

    பாராட்டுகள்.

    ReplyDelete
  7. கலைசெல்வி6 March 2022 at 07:47

    அருமை.

    ReplyDelete