எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 7 March 2022

படித்ததில் பிடித்தவை (“உதிரும் இலைகள்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)


*உதிரும் இலைகள்*

 

தானும் ஒரு உதிரும் இலைதான் என

அறிந்துகொள்ளும் நாள்வரை

இலை நினைத்துக்கொண்டிருந்தது

தான்தான் மரமென…

 

அப்படியெனில்

மரம் என்பது என்ன?

அது ஆயிரம் ஆயிரம்

உதிரும் இலைகளின்

துயரக் கூட்டம்..!

 

*மனுஷ்ய புத்திரன்*



 

7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மனுஷ்ய புத்திரன்*
    (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
    பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது,
    திருச்சி மாவட்டம்,
    துவரங்குறிச்சியில் பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 20 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
    2. என் படுக்கையறையில் யாரோ
    ஒளிந்திருக்கிறார்கள் (1993)
    3. இடமும் இருப்பும் (1998)
    4. நீராலானது (2001)
    5. மணலின் கதை (2005)
    6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
    (2007)
    7. அதீதத்தின் ருசி (2009)
    8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
    9. பசித்த பொழுது (2011)
    10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
    11. அருந்தப்படாத கோப்பை (2013)
    12. தித்திக்காதே [2016]

    ReplyDelete
  2. செல்லதுரை7 March 2022 at 07:38

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்7 March 2022 at 09:22

    அது
    ஆயிரம் ஆயிரம்
    இலைகளை தன்
    வாழ்நாள் முழுதும்
    தாங்கிப் பிடிக்கும்
    ஆதாரம் என்றும்
    கருதலாம்.

    ReplyDelete
  4. சத்தியன்7 March 2022 at 09:23

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  5. கெங்கையா7 March 2022 at 09:24

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. ஸ்ரீகாந்தன்7 March 2022 at 21:21

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. துயரக் கூட்டம்... வித்தியாசமான சிந்தனை

    ReplyDelete