எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 17 March 2022

படித்ததில் பிடித்தவை (“உயிர்த்தெழுகிறான்” – மகுடேசுவரன் கவிதை)

 


*உயிர்த்தெழுகிறான்*

 

இந்த உலகின்

மிக சிறந்த புகைப்படம்

மனைவி பிள்ளைகளைப் பிரிந்து

அயல்நாட்டில்

உழைத்துத் தேய்பவனின் பர்ஸில்

இருக்கிறது..!

அந்தப் புகைப்படத்தால்

அவன் ஒவ்வொரு நாளும்

உயிர்த்தெழுகிறான்..!

 

*மகுடேசுவரன்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மகுடேசுவரன்*

    தொழில் : வணிக சேவைகள்

    வேலை : ஆடை ஏற்றுமதி
    ஆலோசகர்

    இடம்: திருப்பூர், தமிழ்நாடு.

    அறிமுகம் :
    வாழ்க்கையை அதன்
    அத்தனை கசப்போடும்
    இனிப்போடும் எதிர்கொண்டவன்.
    அவற்றில் பலவற்றைக்
    கவிதைகளின் வழியே
    கடந்தவன்.
    சிலவற்றைக் கடக்கவே
    முடியாமல் தவித்திருப்பவன்.
    சொந்த ரசனைகளின்
    உணர்கொம்புகள்
    கூர்மையடைந்ததால் இன்னும்
    உயிர்த்திருப்பவன்.
    முழுமையை நோக்கி என்றும்
    முடிவடையாத யாத்திரையில்
    சென்றுகொண்டிருப்பவன்.

    பிடித்தமானவை :
    நண்பர்கள், பயணங்கள்,
    படித்தல்கள், படைத்தல்கள்.

    பிடித்த திரைப்படங்கள் :
    அகிரா குரோசாவா,
    ஐரோப்பிய/ ஈரான்
    இயக்குநர்களின் படங்கள்.
    தமிழில் மகேந்திரன்,
    பாலுமகேந்திரா படங்கள்.

    தமிழ்த் திரை வரலாற்றின்
    மிகச் சிறந்த 10 படங்கள் :
    1. உதிரிப்பூக்கள்
    2. முள்ளும் மலரும்
    3. பூட்டாத பூட்டுக்கள்
    4. மூன்றாம் பிறை
    5. பதினாறு வயதினிலே
    6. நாயகன்
    7. வீடு
    8. எச்சில் இரவுகள்
    9. கிராமத்து அத்தியாயம்
    10. சுவர் இல்லாத சித்திரங்கள் /
    ரத்தக் கண்ணீர்.

    பிடித்த இசை :
    இசை என்பது திரைப்பட இசை
    மட்டுமேயில்லைதான் என்றாலும்
    என் உயிரில் கலந்த ஒலிகளைத்
    தந்தவர் இளையராஜாதான் !
    நானும் உங்களைப்போலவே
    வெகுநாள் இளையராஜாவின்
    இசையைத் தாழ்த்தி
    மதிப்பிட்டிருந்தவன் தான்.
    என் தந்தை இறந்தபோது
    எனக்கு அவர் பிரேதத்தைக்
    கண்டபோதோ, அதைக் குழியில்
    இறக்கியபோதோ பெரிதாய்
    ஒன்றும் அழுகை வரவில்லை.
    அடுத்த எட்டாம் நாள் காரியப்
    பொருள்களை எடப்பாடி
    சந்தையில் உறவுகளோடு வந்து
    வாங்கிக்கொண்டு பேருந்து
    நிலையத்தில் நின்றிருந்தேன்.
    அங்கிருந்த டீக்கடை
    ஒன்றிலிருந்து
    இளையராஜாவின் குரலில்
    ஒலித்தது ‘இதயம் ஒரு கோயில்...
    அதில் உதயம் ஒரு பாடல்’ என்ற
    பாடல்.
    அடக்கப்பட்ட துக்கம் பொங்கிப்
    பெருகி மண்ணில் விழுந்து
    புரண்டு சுய உணர்ச்சியற்று
    அரை மணிநேரம் அழுது
    தீர்த்தேன்.
    அன்று உணர்ந்தேன்
    அவனை நான்.

    பிடித்த புத்தகங்கள் :
    திரு. வி. கல்யாணசுந்தரனார்
    இயற்றிய அத்தனை நூல்களும்
    அவற்றில் வழங்கும்
    நற்றமிழுக்காகப் பிடிக்கும்.
    மனோன்மணீயம் என்கிற
    நாடகத் தமிழ்க் காப்பியம்.
    மரபில் முடியரசன் கவிதைகள்.
    சுஜாதாவின் புதுமைத் தமிழ்நடை.
    சுந்தர ராமசாமியின் கடைந்து
    பிழிந்த கட்டுரை நடை.
    பிரமிளின் படிம நடை.
    கண்ணதாசனின் நெகிழ்ந்த
    நடை.

    ReplyDelete
  2. சத்தியன்17 March 2022 at 06:41

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்17 March 2022 at 08:22

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  4. கெங்கையா17 March 2022 at 13:10

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்17 March 2022 at 20:23

    மிக உண்மை.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete