எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 25 March 2022

படித்ததில் பிடித்தவை (“சிலந்தியும் பின்னொரு நாளும்” – ஏ.ஆர்.வரதராஜன் கவிதை)


*சிலந்தியும் பின்னொரு நாளும்*

 

வீட்டிற்கு வண்ணமடிக்கும் போதுதான்

அதுவும் தொலைந்திருக்கக் கூடும்.

 

கருப்பாய் சாம்பல்நிற புள்ளி

முதுகின் மீது

அடையாளமாய் காணப்படும்.

 

தன் வலையை

அம்மாவின் நீண்ட

ஒட்டடைக்குச்சிக்கு

அடிக்கடி இழந்தாலும்

சிறுபொழுதிற்கெல்லாம்

புதுவலையில்

தோன்றியிருக்கும்.

 

அதன் தேடலெனக்கு

இன்னும் தீர்ந்திடவில்லை.

 

பின்பொருநாள்

முகப்பின் தாழ்வாரத்தில்

தெரிந்தது

ஒரு சிலந்தியின் வலை.

 

அவசரமாய் கவனித்தேன்.

அதே கருப்பு சிலந்தி தான்

ஆனால் முதுகில்

சாம்பல்நிற

புள்ளி மட்டுமில்லை..!

 

*ஏ.ஆர்.வரதராஜன்*


2 comments:

  1. செல்லதுரை25 March 2022 at 10:45

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்25 March 2022 at 10:48

    மிக அருமை.
    சக உயிர்கள் பால்
    கவிஞரின் நேசம் அற்புதம்.

    ReplyDelete