எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 27 March 2022

படித்ததில் பிடித்தவை (“சோற்றுக்கலையும் வாழ்க்கை” – கல்யாண்ஜி கவிதை)


 *சோற்றுக்கலையும் வாழ்க்கை*

 

தொட்டிச் செடி அவ்வப்போது

துளிர்த்துக்கொண்டிருக்கிறது.

பருவம் பாராமல்

உதிர்ந்துகொண்டே இருக்கிறது

சிவப்புப் பூ.

 

பால்காரக் குவளை சிந்திய

பாலை நக்கிவிட்டு

அற்புதமாகப் பார்க்கிறது

குட்டி போட்டு

மடி தொங்கும் மணி.

 

சுத்திகரிக்க வரும் மூக்கம்மா

கூடைப் பக்கத்தில்

விட்டுப்போன குழந்தை

பேசுகிற பாஷை

எப்போதும் உயரத்திலேயே

இருக்கிறது.

 

சுற்றிலும்

நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.

பார்க்கவிடாமல் வாழ்க்கை

நெற்றியில்

சுருங்கிக் கனக்கிறது.

 

சூரியனை

ஆற்றங்கரை மணலை

தொட்டாற்சுருங்கிச் செடியை

பாசஞ்சர் ரயிலின்

அற்புத இரைச்சலை

பட்டாம்பூச்சியை

தொலைத்துவிட்டு

நாற்காலிக் கால்களில்

நசுங்கிக் கிடக்கிறது

சோற்றுக்கலையும் வாழ்க்கை..!

 

*கல்யாண்ஜி*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. செல்லதுரை27 March 2022 at 10:05

    Mesmerising....
    Lovely.

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்27 March 2022 at 10:54

    கவிஞருக்கு பாராட்டுகளும்,
    வாழ்த்துகளும்,
    நன்றியும்..!

    ReplyDelete
  4. ஜெயராமன்27 March 2022 at 10:54

    கவிதை மிக அருமை.

    ReplyDelete