எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 4 March 2022

படித்ததில் பிடித்தவை (“பேருந்து” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பேருந்து*

 

மறந்து போய்

இறங்கி விட்டார்.

 

கிளம்புகிறது பேருந்து.

 

அங்கிள் நீங்க அவருக்கு

மீதி சில்லரைக் கொடுக்கல…’

ஞாபகப்படுத்துகிறது குழந்தை.

 

விசிலடிக்கிறார்.

 

நிற்கிறது பேருந்து.

 

இறங்கியவர் ஓடி வருகிறார்.

 

நடத்துனர்

சில்லரைக் கொடுத்து

நன்றியை வாங்கிக்கொள்கிறார்.

 

குழந்தை புன்னகை.

தாய் புன்னகை.

நடத்துனர் புன்னகை.

ஒரு புன்னகைச் சித்திரமாய் விரிய

போகிறது பேருந்து..!

 

*ராஜா சந்திரசேகர்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செல்லதுரை4 March 2022 at 08:18

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்4 March 2022 at 08:18

    நேர்மை நிறைந்த
    மனிதர்களின் சூழல்
    என்றும் மகிழ்வு தான்!

    ReplyDelete
  4. நந்தகுமார்4 March 2022 at 09:46

    கவிதை அருமை.

    ReplyDelete