எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 29 November 2014

மெரசலாயிட்டேன்...


“இரு சக்கர வாகனத்தை
ஓட்டும் அம்மாவுக்கு முன்னால்
நின்று பயணிக்கும் சிறுவன்
நான் இரு சக்கர வாகனத்தில்
அவர்களின் வண்டியை
முந்தியவுடன்...
‘அம்மா முந்து முந்து  
வேகமா போ...’ என
அழத்துவங்கி விட்டான்.

நானும் பிரேக் பிடித்து
மெதுவாக அவர்களை
பின் தொடர்ந்து
அந்த சிறுவனின்
அழுகையை மாற்றி
சிரிக்க வைத்து அவனை
மெரசலாக்கினேன்.

அந்த பயணத்தில்...
நானும் குழந்தையாகி
மெரசலாயிட்டேன்..!”

                                 -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment