எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 3 November 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


மரத்தைப் பிரசவிக்கும் பறவை
“ஒரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்.

எரிச்சல் கொள்ளத்தேவை இல்லை.

எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழித்து...
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதைப்
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்..!”

நாவிஷ் செந்தில்குமார்.

No comments:

Post a Comment