எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 5 November 2014

படித்ததில் பிடித்தவை (ஈழத்துக்கவிதை)


“அசோகவனங்கள்
அழிந்து போய் விடவில்லை.
இதே வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.

ஆனால்
சிறைப்பிடித்தது
ராவணனல்ல
ராமனேதான்.

ராமனே ராவணனாய்
தனது அரசிருக்கையில்
முதுகுப்புறமாய்
முகமூடிகளை மாற்றிக்கொண்டதைப்
பார்க்க நேர்ந்தன கண்கள்.

இதயம்
ஒரு முறை அதிர்ந்து நின்றது..!”

                               -  ஈழத்துக்கவிஞர் செல்வி.

No comments:

Post a Comment