எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 7 November 2014

இடம்


“பேருந்து நிறுத்தத்துக்கு
வந்த காலியான
பேருந்தில் ஏறி
உட்காரச் சென்ற
இளைஞன்...

மாற்றுத்திறனாளி /
முதியோர் இருக்கை
அறிவிப்பு ஸ்டிக்கரை
பார்த்தவுடன்
உட்காராமல்
பின்பக்க இருக்கையில்
உட்கார்ந்தான்...

பேருந்தின் அனைத்து
இருக்கைகளும்
நிறைந்தப்பின்...

அடுத்த நிறுத்தத்தில்
ஏறிய மாற்றுத்திறனாளி
அவருக்கு ஒதுக்கப்பட்ட
இருக்கைக்கு செல்லாமல்
இளைஞன் அருகில்
சென்றவுடன்...

அவன் எழுந்து தனது
இடத்தில் அவரை  
உட்கார வைத்து
எல்லோர் மனதிலும்
இடம் பிடித்தான்..!”

               -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment