எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 13 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)



தேடுங்கள்...


சுற்றுலா வந்த பிள்ளைகளின் சந்தோஷம்

தேவாலயத்தின் உள்ளே இரைச்சலானது


பிரார்த்தித்துக்கொண்டு இருந்தவர்கள் அதட்டினர்

விளையாடுகிறவர்கள் வெளியேறுங்கள்

ஜெபிப்பவர்கள் மட்டும் உள்ளே இருக்கலாம்


வேண்டுதல் முடித்து எழுந்த வாத்தியார்

சுவர் பார்த்து அதிர்ந்தார்

மாதாவின் கைகளில் மகன் இல்லை

குழந்தைகளுடன் வெளியேறியிருக்கக்கூடும்!

                                                                                                - ஜான்சுந்தர்
                                                                                      (
விகடன் - 28.07.2010 )

No comments:

Post a Comment