எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 22 June 2014

இடம்


“பேருந்திலோ,
ரயிலிலோ
பயணிக்கையில்...

அடுத்தவர்கள்
நமது இருக்கையின் 
பின்புறம்
கையை வைத்து
ஆக்கிரமிக்கும் போது...

அதுவரை சௌகரியமாக
உட்கார்ந்திருந்த நாம்
வீறுக்கொண்டு
நிமிர்ந்து உட்கார்ந்து
கால்களை பரப்பி
நமது இடத்தை
முழுவதுமாக
கைப்பற்ற
முயற்சிக்கிறோம்...

அவர்கள் பழைய நிலைக்கு
திரும்பும் வரை..!”
          -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment