எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 17 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


திணைமயக்கம்

அந்தப் புறாக்கள்
அஃறிணை. 
                                                                       
குருத்துவார ஓரமும்
கூட்டமாய் இரைத்தேடலாம்.
 

சிலுவைகள் மீதமர்ந்தும்
சிறகுகள் கோதலாம்.
                                                          
தாகமா..?
தர்கா வாசலில்         
தண்ணீர் பருகலாம்.


ஊர்வலமாய்
தெரு எதுவழியும்
திரும்பலாம்.


எல்லாம் முடிந்து                
கோபுர உச்சியில்
கூட்டில் அடையலாம்.


தெரிந்தால் சொல்
திணை மாறும் வழி.

           - நெல்லை ஜெயந்தா.

(ஆனந்த விகடனில் வெளி வந்த சொல்வனம் கவிதைப் போட்டியில் ரூ.2000 பரிசுப் பெற்ற கவிதை)

திணை     -     நிலம்

அஃறிணை  -   பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்

No comments:

Post a Comment