எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 23 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

கடவுளாக இருந்தால் என்ன?

“கடவுள் டை கட்டுகிறார்
நிற்கவில்லை.

கடவுள் கவிதை எழுதுகிறார்
பத்திரிக்கைகள் திருப்பி அனுப்புகின்றன.

கடவுள் கிரிக்கெட் ஆடுகிறார்
முதல் பந்தில்
விக்கெட்டை இழக்கிறார்.

கடவுள் ஷேர் வாங்குகிறார்
இறங்கி விடுகிறது.

கடவுள் தண்ணிர்க் குழாயைத் திறக்கிறார்
காற்றுதான் வருகிறது.

கடவுள் டாஸ்மாக் செல்கிறார்
ஐந்து ரூபாய் ஏற்றியே வசூலிக்கிறார்கள்.

கடவுள் கோயில் செல்கிறார்
வரிசையில் வரச் சொல்கிறார்கள்.
                                            
                                               -  க. ஜானகிராமன்.

No comments:

Post a Comment