எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 20 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


நிறைவு

“என்னுடைய நூற்றைம்பது காட்டுகிற
அதே நேரத்தை காட்டினாலும்
உன்னுடையது
ஏழாயிரத்து எழுநூறு.

காரில் போவதற்கு
மூவாயிரத்துக்கு நீயும்
காலில் போவதற்கு அறுபதுக்கு
நானும்
காலணிகள் வாங்கினோம்
எனக்கான கடைகளில் நீ
நுழைவதில்லை
உன் கிரெடிட் கார்டு நுழையும்
கடைகளில்
நான் நுழைய முடிவதில்லை.

இருந்தும்கூட மெத்தையிலிருந்து
அதிகாலை குதித்து
கோரைப்பாயில் உறங்கும் என்னை
தட்டியெழுப்பி சொல்கிறாய்
தூக்கம் வரவில்லையென்று..!”


                        - ஜெயபாஸ்கரன்.

No comments:

Post a Comment