எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 24 June 2021

படித்ததில் பிடித்தவை (“கடவுளும் மனிதனும்” – நல்லவன் கவிதை)


*கடவுளும் மனிதனும்*

 

கடவுள்

மனிதனை படைத்தார்.

மனிதனும்

பல கடவுள்களை படைத்தான்.

 

மனிதன்

கடவுள் இல்லா இடங்களில்

பேயை கண்டான்.

கடவுள்

மனிதம் இல்லா மனித மனங்களில்

பேயை கண்டார்.

 

கடவுள்

மனிதன் மனதை

கல்லாய் கண்டார்.

மனிதன்

கடவுளை

கல்லில் கண்டான்.

 

மனிதன்

சில தருணங்களில்

கடவுள் ஆனான்.

கடவுள்

இதிகாசங்களில்

மனிதன் ஆனார்.

 

கடவுளும்

பூமியில் மனிதனை

தேடுகிறார்.

மனிதன்

கடவுளை தேடி

அலைகிறான்.

 

ஆனால் இறுதியில்,

கடவுள்

கடவுளாகவே இருக்கிறார்.

மனிதன்

மனிதனாகவே இருக்கிறான்..!

 

*நல்லவன்*

5 comments:

  1. சத்தியன்24 June 2021 at 07:34

    மிகச் சரியான உண்மை.

    ReplyDelete
  2. சீனிவாசன்24 June 2021 at 07:35

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்24 June 2021 at 08:03

    கடவுளையும் மனிதரையும்
    ஒப்பிட்டு வித்தியாசமான
    கோணத்தில் அலசுகிறார்
    கவிஞர்.
    மனிதன் மாறவே இல்லை
    என அழகாக சொல்கிறார்
    கவிதையின் கடைசி வரிகளில்.
    மிக அழகான கவிதை.

    ReplyDelete
  4. ஸ்ரீகாந்தன்24 June 2021 at 08:04

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீதர்24 June 2021 at 09:25

    நன்று.

    ReplyDelete