எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 3 June 2021

படித்ததில் பிடித்தவை (“துரத்திய இயந்திரம்” – சாமி கிரிஷ் கவிதை)

 


*துரத்திய இயந்திரம்*

 

வழக்கமாய்

கதிர் அரிவாள் சத்தங்களை

சந்தங்களாகக் கேட்டு

நெல் கொத்திப் பழகி

வரப்புமேல் வந்தமரும்

பறவைகளை விரட்டியபடி

இரைச்சலோடு

இயங்கிக்கொண்டிருக்கிறது

கதிர் அறுக்கும் இயந்திரம்..!

 

நிலமற்று பிழைத்து வந்த

விவசாயக்கூலிகளை

வயல்விட்டு

துரத்தியதுபோலவே..!

 

*சாமி கிரிஷ்*


3 comments:

  1. ஸ்ரீராம்3 June 2021 at 08:39

    நவீனமயமாதலின்
    இயற்க்கைக்கு
    எதிரான விளைவை
    மிக நளினமாக
    சுட்டிக்காட்டும் கவிதை.

    ReplyDelete
  2. ஸ்ரீகாந்தன்3 June 2021 at 09:20

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்3 June 2021 at 12:07

    கவிதை மிக அருமை.

    ReplyDelete