எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 15 June 2021

படித்ததில் பிடித்தவை (“சுருக்கக் குறிப்பு” – பா.சிவகுமார் கவிதை)


*சுருக்கக் குறிப்பு*

 

வேலையில்லா திண்டாட்டம்

மாதத்தவணை கட்ட இயலா தவிப்பு

திறக்காத பள்ளிக்கு கட்டணம்

வங்கி அதிகாரிகளின் அர்ச்சனை

திமிங்கலகுட்டி போடும் மீட்டர் வட்டி

புரிந்து கொள்ளாத இரத்த உறவுகள்

விலகி போன சொந்தங்கள்

கை கொடுக்காத நட்பு

அதிகரித்த அழுத்தங்கள்

தண்டுவடத்தை நொறுக்கிய பாரங்கள்

இவைகள் எதுவுமே

இறப்பிற்கான காரணமாகக்

குறிப்பிடப்படவில்லை...

 

தூக்கிட்டு தற்கொலை

செய்து கொண்டவனின்

பிரேத அறிக்கையில்..!

 

*பா.சிவகுமார்*

6 comments:

  1. ஹரிகுமார்15 June 2021 at 10:00

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. செல்லதுரை15 June 2021 at 10:01

    நிதர்சனமான உண்மைகள்...
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்15 June 2021 at 10:47

    சாமான்ய மனிதன்
    அன்றாடம் எதிர்கொள்ளும்
    வேதனைகளை அற்புதமாக
    கவிதையில் வடித்திருக்கிறார்
    கவிஞர்.

    ReplyDelete
  4. கருணாகரன்15 June 2021 at 11:22

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. கெங்கையா15 June 2021 at 11:46

    அருமையான கவிதை.

    ReplyDelete
  6. லதா இளங்கோ15 June 2021 at 14:18

    மிருந்த துயரம்.

    ReplyDelete