எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 5 June 2021

படித்ததில் பிடித்தவை (“முரண்” – தி.கலையரசி கவிதை)

 

*முரண்*

 

சாமி படத்தின் அருகே

வைக்கப்பட்ட கற்கண்டுகளை

பூசை மாடத்தில் இருந்து

எறும்புகள் இழுத்துப் போவதை

ரசித்துக்கொண்டிருந்த

அதே சமையல் அறையில்தான்

முன்னிரவு

நான் கிழித்திருந்த

பூச்சிக்கொல்லி சாக்பீஸ்

கோடுகளுக்கு

பலியாகிக் கிடந்தன

கரப்பான் பூச்சிகள்..!

 

*தி.கலையரசி*


2 comments:

  1. சீனிவாசன்5 June 2021 at 08:39

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்5 June 2021 at 12:09

    மிக அருமை.

    ReplyDelete