எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 13 June 2021

படித்ததில் பிடித்தவை (“கடைசி புத்தகம்” – மகுடேசுவரன் கவிதை)

 


*கடைசி புத்தகம்*

 

புத்தகக் கண்காட்சியில்

ஏழைத் தாயொருத்தி

தன் செல்ல மகனுக்கு

வேண்டிய நூல்களை

வாங்கித் தந்தப்படி வந்தாள்.

மகனின் கைகளில்

அறுவுக்கடல்கள்

அமைதியாய்ச் சேர்ந்திருந்தன.

கடைசிக் கடையில் வாங்கிய

புத்தகமொன்றுக்குப் பணம் தந்து

மீதம் பெற்றவள்

போதும் கண்ணு...

இனிமே பஸ்சுக்கு

அளவாத்தான் இருக்கு... என்றாள்.

மகன்

ஆவலாய் எடுத்த புத்தகத்தைத்

திருப்பி வைத்தான்.

பேருந்துக் காசோடு வெளியேறிய

அப்பெண்ணின் மகன்தான்

இன்னும் நாம் காணாத விண்மீனைக்

கண்டுபிடிப்பான் –

அதில் நம் கால்தடம் பதிக்க

கலம் செய்வான் என்று

உறுதியாய்க் கூறுகிறேன்..!

 

*மகுடேசுவரன்*



8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மகுடேசுவரன்*

    தொழில் : வணிக சேவைகள்

    வேலை : ஆடை ஏற்றுமதி
    ஆலோசகர்

    இடம்: திருப்பூர், தமிழ்நாடு.

    அறிமுகம் :
    வாழ்க்கையை அதன்
    அத்தனை கசப்போடும்
    இனிப்போடும் எதிர்கொண்டவன்.
    அவற்றில் பலவற்றைக்
    கவிதைகளின் வழியே
    கடந்தவன்.
    சிலவற்றைக் கடக்கவே
    முடியாமல் தவித்திருப்பவன்.
    சொந்த ரசனைகளின்
    உணர்கொம்புகள்
    கூர்மையடைந்ததால் இன்னும்
    உயிர்த்திருப்பவன்.
    முழுமையை நோக்கி என்றும்
    முடிவடையாத யாத்திரையில்
    சென்றுகொண்டிருப்பவன்.

    பிடித்தமானவை :
    நண்பர்கள், பயணங்கள்,
    படித்தல்கள், படைத்தல்கள்.

    பிடித்த திரைப்படங்கள் :
    அகிரா குரோசாவா,
    ஐரோப்பிய/ ஈரான்
    இயக்குநர்களின் படங்கள்.
    தமிழில் மகேந்திரன்,
    பாலுமகேந்திரா படங்கள்.

    தமிழ்த் திரை வரலாற்றின்
    மிகச் சிறந்த 10 படங்கள் :
    1. உதிரிப்பூக்கள்
    2. முள்ளும் மலரும்
    3. பூட்டாத பூட்டுக்கள்
    4. மூன்றாம் பிறை
    5. பதினாறு வயதினிலே
    6. நாயகன்
    7. வீடு
    8. எச்சில் இரவுகள்
    9. கிராமத்து அத்தியாயம்
    10. சுவர் இல்லாத சித்திரங்கள் /
    ரத்தக் கண்ணீர்.

    பிடித்த இசை :
    இசை என்பது திரைப்பட இசை
    மட்டுமேயில்லைதான் என்றாலும்
    என் உயிரில் கலந்த ஒலிகளைத்
    தந்தவர் இளையராஜாதான் !
    நானும் உங்களைப்போலவே
    வெகுநாள் இளையராஜாவின்
    இசையைத் தாழ்த்தி
    மதிப்பிட்டிருந்தவன் தான்.
    என் தந்தை இறந்தபோது
    எனக்கு அவர் பிரேதத்தைக்
    கண்டபோதோ, அதைக் குழியில்
    இறக்கியபோதோ பெரிதாய்
    ஒன்றும் அழுகை வரவில்லை.
    அடுத்த எட்டாம் நாள் காரியப்
    பொருள்களை எடப்பாடி
    சந்தையில் உறவுகளோடு வந்து
    வாங்கிக்கொண்டு பேருந்து
    நிலையத்தில் நின்றிருந்தேன்.
    அங்கிருந்த டீக்கடை
    ஒன்றிலிருந்து
    இளையராஜாவின் குரலில்
    ஒலித்தது ‘இதயம் ஒரு கோயில்...
    அதில் உதயம் ஒரு பாடல்’ என்ற
    பாடல்.
    அடக்கப்பட்ட துக்கம் பொங்கிப்
    பெருகி மண்ணில் விழுந்து
    புரண்டு சுய உணர்ச்சியற்று
    அரை மணிநேரம் அழுது
    தீர்த்தேன்.
    அன்று உணர்ந்தேன்
    அவனை நான்.

    பிடித்த புத்தகங்கள் :
    திரு. வி. கல்யாணசுந்தரனார்
    இயற்றிய அத்தனை நூல்களும்
    அவற்றில் வழங்கும்
    நற்றமிழுக்காகப் பிடிக்கும்.
    மனோன்மணீயம் என்கிற
    நாடகத் தமிழ்க் காப்பியம்.
    மரபில் முடியரசன் கவிதைகள்.
    சுஜாதாவின் புதுமைத் தமிழ்நடை.
    சுந்தர ராமசாமியின் கடைந்து
    பிழிந்த கட்டுரை நடை.
    பிரமிளின் படிம நடை.
    கண்ணதாசனின் நெகிழ்ந்த
    நடை.

    ReplyDelete
  2. சத்தியன்13 June 2021 at 06:54

    கவிஞருக்கு பாராட்டுக்கள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா13 June 2021 at 07:10

    கவிதை மிக மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  4. ஸ்ரீராம்13 June 2021 at 09:13

    மிக உண்மை.
    வாசிப்பு மட்டுமே
    அறிவு வாசலைத்
    திறக்கும் திறவு கோல்.

    ReplyDelete
  5. செல்லதுரை13 June 2021 at 12:02

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. சீனிவாசன்13 June 2021 at 13:57

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  7. கவிதை அருமை


    ReplyDelete
  8. லதா இளங்கோ15 June 2021 at 11:24

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete