எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 7 June 2021

படித்ததில் பிடித்தவை (“காத்திருப்பு” – சரண்யா சத்தியநாராயணன் கவிதை)

 


*காத்திருப்பு*

 

தாவாங்கட்டையைப் பிடித்து

தலையில் வகிடு எடுத்து

இரட்டைப் பின்னலிட்டு

பான்ஸ் பௌடரை அளவாகப் பூசி

பழிப்பு காட்டியபடியே

கண்ணில் மை தீட்டி

சிவப்பு நிற சாந்துப்பொட்டால்

நெத்தியிட்டு

மல்லி கனகாம்பரத்தைத்

தலையில் சூட்டி

அழகை ரசித்துக் கன்னம் தடவி

நெட்டி எடுத்துக்கொண்டிருக்கின்றாள் அம்மா

இன்னும் சற்று நேரம்

என்னை உறங்க விடுங்கள்

அம்மாவின் முத்தம் ஒன்று

பாக்கி இருக்கின்றது..!

 

*சரண்யா சத்தியநாராயணன்*


7 comments:

  1. என்றென்றும்

    ReplyDelete
  2. செல்லதுரை7 June 2021 at 07:18

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்7 June 2021 at 07:59

    மிக அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்7 June 2021 at 09:35

    தாயன்பிற்கும்
    பெண் குழந்தைக்கும்
    இடையிலான உறவிற்கு
    நிகரில்லை இவ்வுலகில்..!

    ReplyDelete
  5. கெங்கையா7 June 2021 at 11:07

    தாய் பாசம்
    கவிதை அருமை.

    ReplyDelete
  6. சீனிவாசன்7 June 2021 at 12:24

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. To hug with smile.

    ReplyDelete