எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 3 December 2021

படித்ததில் பிடித்தவை (“எதிர்பார்ப்பு” – செ.புனிதஜோதி கவிதை)


*எதிர்பார்ப்பு*

 

ஒரு வேளை உணவு உண்ட

வேலைக்காரி நன்றி

விசுவாசத்தை வேலையில்

திரும்பக் காட்டவேண்டும்...

 

உண்டியலில் காசு இட்டதும்

வேண்டுதல் நிறைவேறும்

அருளை இறை திரும்பத் தந்திட வேண்டும்…

 

சாலையோரப் பிச்சைக்காரனுக்கு

இடும் சில்லரையோடு

கைகூப்பலும் வந்திட வேண்டும்...

 

என்றோ, யாருக்கோ

வழங்கிய உதவியோ, கருணையோ,

இரக்கமோ, புன்னகையோ…

 

திருப்ப எதிர்பார்க்கும்

வாலாட்டும் நாயாய்

மனம் அலைகிறது..!

 

*செ.புனிதஜோதி*


6 comments:

  1. சத்தியன்3 December 2021 at 09:21

    கவிதை அருமை.
    பாராட்ட வார்த்தைகள்
    இல்லை!

    ReplyDelete
  2. செல்லதுரை3 December 2021 at 09:22

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. பெருமளவு மக்கள் எதிர்ப்பார்த்து தான் இருக்கின்றார். ஒரு சிலர் வேண்டுமானால் மறுக்கலாம். அருமையான பதிவு

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K3 December 2021 at 13:51

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சீனிவாசன்3 December 2021 at 13:52

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  6. கெங்கையா3 December 2021 at 21:10

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete