எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 12 December 2021

படித்ததில் பிடித்தவை (“அன்பின் கையெழுத்து” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*அன்பின் கையெழுத்து*

 

ஒரு மழை நாளில்

ஓர் குடைகீழ்

நாம் நிற்க

என் கையெழுத்திட்டு

நான் உனக்கு

வழங்கிய புத்தகம்

இதோ இத்தனை

வருடங்கள் கழித்து

ஒரு பழைய

புத்தகக் கடையில்

 

வாங்கிச் செல்கிறேன்.

 

புத்தகத்தில் அழிந்திருக்கிறது

என் பெயரும்

நம் அன்பும்..!

 

*ராஜா சந்திரசேகர்*

(01.10.2008 ஆனந்த விகடன் 
இதழில் பிரசுரமானது)



7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செல்லதுரை12 December 2021 at 09:02

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீதர்12 December 2021 at 09:03

    நன்று.
    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  4. கவிதை அருமை. உங்கள் கவிதை தொகுப்பு வெளியாவது எப்போது?

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்க வேண்டும்
      சிவா.

      Delete
  5. கெங்கையா12 December 2021 at 12:20

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்12 December 2021 at 19:49

    நட்பின் பரிசை
    உதாசீனம் செய்வது
    வேதனையின் உச்சகட்டம்!

    ReplyDelete