எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 30 September 2021

படித்ததில் பிடித்தவை (“பெயரிடப்படாத பறவையின் இறகு” – ரஞ்சித் பிரேதன் கவிதை)

 


*பெயரிடப்படாத பறவையின் இறகு*

 

வெளிச்சம் வியாபித்த பெருவெளியில்

பெயரிடப்படாத பறவையின் இறகொன்று

மென்காற்றில் சுழன்றபடி

முற்றிலும் எதிர்பாராத நாளொன்றில்

என் விரல்களை வந்தடைந்தது.

 

அதன் வண்ணம்

அதன் வாசம் மற்றும்

அதன் மென்மை

எனக்கு பரிட்சியமான

ஒரு பறவையின் பெயரினை

நினைவூட்டி செல்கிறது.

 

எனது காதுகளை குடையவும்

எனது அலமாரியை அலங்கரிக்கவும்

எப்போதாவது மை-தொட்டு எழுதவும்

என்னோடே பயணித்துவருகின்றது

அந்த பறவை விட்டு சென்ற இறகு.

 

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு பறவையின்

ஒவ்வொரு இறகென

என்னை வந்தடைந்த வண்ணமாய்

இறகுகளால் நிரம்பி

வழியத்தொடங்கியது வாழ்வு.

 

இப்படியாய் காலம் கடந்து

இறகுகளை ஒன்றுசேர்த்து

ஒரு சிறகாகவும்

சிறகுகளை ஒன்று சேர்த்து

ஒரு பறவையாகவும்

என்னை நான் உருவாக்கிக்கொண்டு

பறக்கத்தொடங்கினேன்.

 

தனது இறகுகள் இழந்த சூட்சமத்தை

அறிந்துவிட்டிருந்த பறவைகள்

பறக்கத்தயங்கி பீதியில்

கூடடைந்து விட்டன..!

 

*ரஞ்சித் பிரேதன்*


5 comments:

  1. சத்தியன்30 September 2021 at 17:21

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. சுப்புலெஷ்மி30 September 2021 at 17:22

    நன்று.

    ReplyDelete
  3. சீனிவாசன்30 September 2021 at 17:23

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்30 September 2021 at 17:25

    மிக அருமை.
    சக உயிர்களை
    அழிக்கும்
    மனிதனின் செயலை
    மிக மென்மையாக
    சாடும் கவிதை.

    ReplyDelete
  5. செல்லதுரை30 September 2021 at 17:26

    கவிதை மிக அருமை.

    ReplyDelete