எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 22 September 2021

படித்ததில் பிடித்தவை (“கலையாதக் கோலம்” – செ.புனிதஜோதி கவிதை)


*கலையாதக் கோலம்*

 

வரிசையாய்

அடுக்கப்பட்ட

செருப்புகள்.

கோலமாவில்

வரைந்த

கலையாதக் கோலம்.

சாத்தப்பட்டிருந்த

வீட்டின் கதவு...

 

முதல்தளத்தை

கடந்தவுடன்...

கலைந்த

செருப்புகள்.

சாக்பீஸ்சால்

வரைந்த

கோலம்.

சாத்தப்பட்ட

வீட்டின் கதவு...

 

இரண்டாம்

தளத்தை அடைந்தவுடன்

அதுவும் அப்படியே.

விழிகள் மட்டும்

பேசிகொண்டே

வந்தன…

கோலத்தோடும்,

செருப்போடும்,

பூட்டப்பட்டக்

கதவோடும்.

 

ஏதோ வெறுமை

அப்பிய நிலையில்

மனம் பரிதவித்தே

நகர்ந்தது.

 

எனக்கான குடியிருப்புப்

பகுதிக்குள்…

மனிதமொழியற்று

துக்கத்தைப் பூசியிருந்தன

எதிரெதிர் சுவர்கள்..!

 

*செ.புனிதஜோதி*


6 comments:

  1. செல்லதுரை22 September 2021 at 14:47

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்22 September 2021 at 14:49

    அபார்ட்மெண்ட் கலாசாரத்தையும்,
    அதில் வசிக்கும் மனிதர்களின்
    விலகியிருக்கும் தன்மையையும்
    தெளிவாகக் கூறும் கவிதை.

    ReplyDelete
  3. சங்கர்22 September 2021 at 14:51

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. கெங்கையா22 September 2021 at 14:55

    அருமையான கவிதை.

    ReplyDelete
  5. சுப்புலெஷ்மி22 September 2021 at 14:55

    நன்று.

    ReplyDelete
  6. சீனிவாசன்22 September 2021 at 14:57

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete