எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 1 October 2021

படித்ததில் பிடித்தவை (“துரோகத்தின் ருசி” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 

*துரோகத்தின் ருசி*

 

யாரும் இருக்கிறார்களா

என்று இன்னொருமுறை

பார்த்துக் கொண்டார்கள்.

 

துரோகத்தின் கோப்பை

முழுமையும் நஞ்சால்தான்

நிரம்பியிருந்தது.

 

ஆனால் முதல் மிடறை

அருந்தும் போது மட்டும்

அது ஏன் அப்படி

தித்திக்கிறது?

 

அதுதான்

அமிர்தம் என்று

நம்மை முழுமையாக

நம்பச் செய்கிறது..!

 

*மனுஷ்ய புத்திரன்*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மனுஷ்ய புத்திரன்*
    (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
    பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது,
    திருச்சி மாவட்டம்,
    துவரங்குறிச்சியில் பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 20 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
    2. என் படுக்கையறையில் யாரோ
    ஒளிந்திருக்கிறார்கள் (1993)
    3. இடமும் இருப்பும் (1998)
    4. நீராலானது (2001)
    5. மணலின் கதை (2005)
    6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
    (2007)
    7. அதீதத்தின் ருசி (2009)
    8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
    9. பசித்த பொழுது (2011)
    10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
    11. அருந்தப்படாத கோப்பை (2013)
    12. தித்திக்காதே [2016]

    ReplyDelete
  2. செல்லதுரை1 October 2021 at 15:03

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்1 October 2021 at 15:05

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சுப்புலெஷ்மி1 October 2021 at 15:06

    நன்று.

    ReplyDelete