எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 19 September 2021

படித்ததில் பிடித்தவை (“தொடங்கவில்லை” – ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதை)

 


*தொடங்கவில்லை*

 

துயிலெழுந்து விட்டார்

நீதிபதி.

வாக்கிங் புறப்பட்டு விட்டார்

வக்கீல்.

குளியல் முடித்துவிட்டார்

காவலர்.

சீருடை பூண்டுவிட்டார்

தண்டனைச் சிப்பந்தி.

 

நானோ

இன்னும் என் குற்றங்கள்

செய்யத் தொடங்கவில்லை..!

 

*ஜெ.பிரான்சிஸ் கிருபா*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *ஜெ. பிரான்சிஸ் கிருபா*
    (இறப்பு: செப்டம்பர் 16, 2021)
    ஒரு தமிழ் நவீன கவிதை
    எழுத்தாளர்.
    இவர் திருநெல்வேலி மாவட்டம்,
    நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு,
    பத்தினிப்பாறை கிராமத்தைச்
    சேர்ந்தவர்.
    பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.

    இவர் கவிதை, புதினம்
    எழுதியுள்ளார்.
    மல்லிகைக்கிழமைகள்,
    ஏழுவால் நட்சத்திரம் எனும்
    கவிதை நூல்களை
    எழுதியுள்ளார்.
    இவர் எழுதிய கன்னி எனும்
    புதினம் 2007 ஆம் ஆண்டில்
    ஆனந்த விகடனின் சிறந்த
    புதினம் எனும் வகைப்பாட்டில்
    விருது பெற்றுள்ளது.
    2008 ஆம் ஆண்டுக்கான
    நெய்தல் இலக்கிய அமைப்பின்
    சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.

    புதினம் : கன்னி

    கவிதை தொகுப்புகள் :

    மல்லிகைக் கிழமைகள்,
    சம்மனசுக் காடு,
    ஏழுவால் நட்சத்திரம்,
    நிழலன்றி ஏதுமற்றவன்,
    மெசியாவின் காயங்கள் &
    வலியோடு முறியும் மின்னல்.

    விருதுகள்:

    சுந்தரராமசாமி விருது -
    கவிதைக்கான விருது (2008)

    சுஜாதா விருது -
    சம்மனசுக்காடு (2017)
    மீரா விருது.
    ஆனந்த விகடன் விருது.

    ReplyDelete
  2. ஜெயராமன்19 September 2021 at 08:33

    I read in a blog
    about his passing away
    two days back.
    There are so many who
    contribute to the language
    with out coming into limelight.
    Thanks for sharing.

    ReplyDelete
  3. சத்தியன்19 September 2021 at 08:38

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்19 September 2021 at 10:32

    மிக அருமை.

    ReplyDelete